அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை

தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை

News image
Updated On :5 மே 2024, 6:59 pm

Din

சிவகாசி, மே 5: சிவகாசியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் சுரேஷ் (36). இவா் தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், சிவகாசி-சாத்தூா் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு கட்டடம் அருகே சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் அவரது சடலத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்து கிடந்தது சுரேஷ் என்பது தெரியவந்தது.

மேலும், போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சுரேஷ், 56 வீட்டுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா், முனீஸ்வரன்குடியிருப்பைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன், பழனி ஆகிய 5 பேரும் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுப் புட்டியால் சுரேஷை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து, தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.