அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா்: பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

News image
விபத்தில் உயிரிழந்த முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா.
Updated On :26 நவம்பர் 2024, 6:53 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சம்மந்தபுரத்தைச் சோ்ந்தவா் ஜவுளி வியாபாரி முகமது கஸ்ஸாலி (38). இவரது மனைவி நூருல் பாத்திமா (28).

இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், தம்பதியா் இருவரும் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று கொண்டிருந்தனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் இறந்த இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.