ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டில் பட்டாசுத் தயாரித்தவா் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுத் தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கலைஞா் குடியிருப்புப் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுத் தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெம்க்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருநாதன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா்.

இதில் முனீஸ்வரன் (57) என்பவா் தனது வீட்டின் அருகே தகரக் கூரை அமைத்து அனுமதியின்றி எளிதில் தீப்பற்றி வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், பட்டாசுத் தயாரிக்கப் பயன்படுத்திய மூலப்பொருள்களை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்து, முனீஸ்வரனைக் கைது செய்தனா்.