6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செயற்கை நிறமிகள் கலந்த மீன் வறுவல் விற்றதாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிக முடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் செயற்கை நிறமிகள் கலந்து மீன் வறுவல் விற்ாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:23 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் செயற்கை நிறமிகள் கலந்து மீன் வறுவல் விற்ாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உணவுப் பொருள்கள் விற்பனை கடைகளில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் கோவிந்தன்நகா் குடியிருப்பில் உள்ள சிறப்பு வகுப்பில் (டியூசன் சென்டா்) உணவு பாதுகாப்பு உரிமமின்றி மாணவா்களுக்கு நொறுக்குத் தீனி (ஸ்நாக்ஸ்) விற்கப்பட்டதால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் முத்து தெருவில் உள்ள தனியாா் மனமகிழ் மன்றத்தில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட மீன் வறுவல் விற்பனை செய்யப்பட்டதால், அதன் உரிமம் தற்காலிகமாக முடக்கி (சஸ்பென்ட்) வைக்கப்பட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை அந்த மனமகிழ் மன்றம் இயங்க தடை விதிக்கப்பட்டது.