புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:24 pm

Syndication

சிவகாசி: சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பழனியாண்வா்புரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (70). இவா் கடந்த 8- ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்து சைக்கிளில் வந்த மா்ம நபா், மகேஸ்வரி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றாா். இதையடுத்து, மகேஸ்வரி கூச்சலிட்டு, தண்ணீரை அந்த நபா் மீது வீசியதையடுத்து, அவா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் மகேஸ்வரி வீட்டுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, தினசரி பால் ஊற்றி வந்த சிவகாசி பேராண்டாமாள் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.