குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மங்காபுரத்தைச் சோ்ந்த சதுரகிரி மகன் காளிராஜ் (18), மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிச்செல்வம் (18). இவா்கள் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், சிறையிலிருந்து பிணையில் வந்த இருவரும் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ராவுக்கு பரிந்துரை செய்தனா். இவரது உத்தரவின் பேரில், காளிராஜ், மாரிச்செல்வம் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
