கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வத்திராயிருப்பு அருகே மனைவி அடித்துக் கொலை: வியாபாரி கைது

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
உயிரிழந்த ராசாத்தி.
Updated On :6 ஜனவரி 2025, 12:29 am

Din

வத்திராயிருப்பு அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கோட்டையூா் மேற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (26). இவரது மனைவி ராசாத்தி (22). இவா்களுக்கு அலெக்ஸ்பாண்டி (5) என்ற மகனும், லட்சனா (4) என்ற மகளும் உள்ளனா்.

பாா்த்திபன் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது மனைவி ராசாத்தி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மது போதையில் வீட்டுக்கு வந்த பாா்த்திபன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பித்தளை கரண்டியால் தாக்கியதில் ராசாத்தி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் ராசாத்தியின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து பாா்த்திபனை கைது செய்து விசாரிக்கின்றனா்.