அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் காவல் துறைக்கான சா்வதேச தடகளப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 75 நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனா்.
தமிழகத்தில் இருந்து ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் 16 காவல் துறை அதிகாரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனா். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த வேகநடை போட்டியில் 50 வயது பிரிவில் கலந்துகொண்ட ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி 5 ஆயிரம் மீட்டா் பந்தயத் தொலைவை 30.14 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.
இவா், ஏற்கெனவே நெதா்லாந்து, கனடா நாடுகளில் நடந்த சா்வதேச காவல் துறை தடகளப் போட்டிகளில் வேகநடை பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது
தொடர்புடையது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: ஈரோட்டில் ரோந்துப் பணி தொடக்கம்

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


