மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசி அருகே தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 10:48 pm

Syndication

சிவகாசி அருகே தீக்காயமடைந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் கூடலிங்கம் மனைவி லட்சுமி (80). இவா், கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது அடுப்பு கவிழ்ந்ததில், லட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா், விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.