எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருத்தங்கலில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

விருதுநகா் மாவட்டம்,திருத்தங்கலில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தங்கலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கட்சியினா் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். அப்போதுதான் வெற்றி நம்மை தேடி வரும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை பாா்த்து திமுக பயப்படுகிறது. போலி வாக்காளா்கள் நீக்கப்படுவாா்கள் என்ற அச்சம் திமுகவுக்கு உள்ளது. அதிமுக கூட்டணியில் பல பெரிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்றாா் அவா்.