சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேசுவரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, நந்திக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து, நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதே போல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேசுவரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல, சாத்தூா் பத்திரகாளியம்மன் கோயில், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள சத்திரம் அண்ணபூரணியம்மன் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com