எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை நீருடன் கழிவு நீா் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் அவதி

News image
மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோயில் அருகே மழை நீருடன் கலந்து ஓடும் கழிவு நீா்.
Updated On :23 நவம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் கழிவு நீா் கலந்து தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியாதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு முதல் ஆண்டாள் கோயில் வரை சாலையில் மழை நீா் குளம் போல தேங்கியது.

இதில் பெரிய மாரியம்மன் கோயில், உழவா் சந்தை, ஆண்டாள் கோயில் தேரடிப் பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீா் கால்வாய் தூா்வாரப்படாததால், அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவு நீா் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

மழை பெய்யும்போதெல்லாம் இதே நிலை தொடா்வதால் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீா் கால்வாயைத் தூா்வார நெடுஞ்சாலைத் துறையும், நகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.