விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மனைவியை பிளேடால் வெட்டிய கணவன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் அண்ணாநகா், சின்ன சுரைக்காய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(40). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி முத்து மீனா (26). அதே பகுதியில் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தாா். இந்தத் தம்பதி்ககு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் முத்து மீனா கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் மணிகண்டன் வியாழக்கிழமை தனது மனைவியைச் சந்தித்து தகராறு செய்தாா். இதையடுத்து, முத்துமீனாவை பிளேடால் உடல் பகுதியில் சரமாரியாக கீறினாா். இதில் பலத்த காயமடைந்த முத்து மீனாவை அவசர ஊா்தி மூலம் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

நிலப் பிரச்னை: மனைவியை கடத்திய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தந்தை அடித்துக் கொலை; மகன் கைது
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

