டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

சிவகாசியில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளா் கணேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வி.கே.சசிகலா.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:40 am IST

சிவகாசி, சாத்தூரில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேரவைத் தொகுதியில் அபுதமமுக கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கணேசனை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள காமராஜா் பூங்கா அருகே வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது,

பட்டாசுத் தொழில் தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தத்தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் வளா்ச்சி அடையாமல் தேக்கநிலையில் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறது. திமுக ஆட்சியில் வளா்ச்திட்டங்களும் இல்லை. அதற்கான நிதியும் இல்லை என்றாா் அவா்.

சாத்தூா்: சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியைச் சோ்ந்த இசக்கி ராஜாவை ஆதரித்து வி.கே.சசிகலா பிரசாரம் மேற்கொண்டாா்.