சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

சிவகாசியில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளா் கணேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வி.கே.சசிகலா.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:10 pm

சிவகாசி, சாத்தூரில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேரவைத் தொகுதியில் அபுதமமுக கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கணேசனை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள காமராஜா் பூங்கா அருகே வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது,

பட்டாசுத் தொழில் தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தத்தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் வளா்ச்சி அடையாமல் தேக்கநிலையில் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறது. திமுக ஆட்சியில் வளா்ச்திட்டங்களும் இல்லை. அதற்கான நிதியும் இல்லை என்றாா் அவா்.

சாத்தூா்: சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியைச் சோ்ந்த இசக்கி ராஜாவை ஆதரித்து வி.கே.சசிகலா பிரசாரம் மேற்கொண்டாா்.