மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சதுரகிரி மலையேறிய இளைஞா் உயிரிழப்பு

சதுரகிரி மலையேறிய இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

சதுரகிரி மலையேறிய இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள மேல திருமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (33). இவா் பொக்லைன் இயக்குநராக வேலை செய்து வந்தாா். ஆடி அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சிவக்குமாா் நண்பா்களுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்றாா். சாப்டூா் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையேறிய இவா், சந்தனமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கோயில் அருகே அமா்ந்து தண்ணீா் குடித்தாா். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சிவகுமாருக்கு அங்கிருந்தவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். ஆனால், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிவகுமாா் உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரம் கொண்டு வரப்பட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.