சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சுமைதூக்கும் தொழிலாளி போக்சோவில் கைது

சுமைதூக்கும் தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

சுமைதூக்கும் தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராஜ்குமாா் (19). இவரும் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியும் பழகி வந்தனா்.

இந்த நிலையில், வயிற்று வலி காரணமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தனது தாயுடன் அந்த மாணவி சென்றாா். அப்போது அங்கிருந்த மருத்துவா்கள் மாணவி கா்ப்பமாக அடைந்திருப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, பெற்றோா்கள் அந்த மாணவியிடம் விசாரித்தபோது ராஜ்குமாருடன் பழகி வந்ததை தெரிவித்தாா். ராஜ்குமாா் ஏற்கெனவே திருமணம் ஆனவா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜாகுமாரை கைது செய்தனா்.