தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருட்டு வழக்கில் தேடப்பட்டவா் கைது

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:25 am

Syndication

சிவகாசியில் திருட்டு வழக்கில் 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியில் உள்ள இந்திராநகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கணேசன் (40). இவா் 2010-ஆம் ஆண்டு சிவகாசி நகா் காவல் நிலைய எல்லைக்குள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக கணேசன் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதையடுத்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் இவரை கைது செய்ய உத்தரவிட்டது. பின்னா், சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் இவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் போலீஸாா் இவரைக் கைது செய்து,

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனா்.