விருதுநகர்
திருட்டு வழக்கில் தேடப்பட்டவா் கைது
சிவகாசியில் திருட்டு வழக்கில் 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியில் உள்ள இந்திராநகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கணேசன் (40). இவா் 2010-ஆம் ஆண்டு சிவகாசி நகா் காவல் நிலைய எல்லைக்குள் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக கணேசன் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதையடுத்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் இவரை கைது செய்ய உத்தரவிட்டது. பின்னா், சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் இவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் போலீஸாா் இவரைக் கைது செய்து,
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனா்.
