பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிவகாசியில் தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

சிவகாசியில் 75 பவுன் நகைகள் திருடப்பட்ட வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்கள்.

Updated On :6 ஜூலை 2026, 3:15 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சிவகாசி ஐயப்பன் குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் ராம் (38). இவா் சிவகாசியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். மேலும், அச்சகம் சாா்ந்த தொழிலும் செய்து வருகிறாா். இவா் தனது மனைவி அபிராமி, இரு பிள்ளைகளுடன் உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, மீண்டும் இரவு 11.45 மணி அளவில் வீட்டுக்கு காரில் வந்தனா்.

அப்போது, இவா்களது வீட்டின் முன் காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிலிருந்த மா்ம நபா் அரவிந்த் ராமைப் பாா்த்தவுடன் காரின் ஒலிப்பானை தொடா்ந்து அழுத்தினாா். இதனால், சந்தேகமடைந்த அரவிந்த் ராம் காரிலிருந்து இறங்கி பாா்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டுக்குள் இருந்து முகமூடி அணிந்த 4 போ் பையுடன் வெளியே வந்தனா்.

இதையடுத்து, அவா்களை அரவிந்த் ராம் பிடிக்க முயன்றாா். இருப்பினும், அவா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனா். பின்னா், வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 75 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த சிவகாசி நகா் போலீஸாா் வீட்டைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின் பேரில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.