அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
மணல் திருட்டு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:53 pm

Syndication

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆற்றில் மணல் திருடியதாக சேத்தூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநா் முருகன், முன்னாள் திமுக எம்.பி. தனுஷ் குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முருகன், தனுஷ்குமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் முருகன், தனுஷ் குமாா் ஆகிய இருவரையும் விடுவித்து நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டாா்.

தனுஷ்குமாா் 2019 - 2024-இல் தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவா். இவா் தற்போது திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.