ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராஜபாளையத்தில் தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் மரியாதை

News image

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன்.

Updated On :30 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

முன்னதாக, பிரிசில்லா பாண்டியனும், கே.டி. ராஜேந்திர பாலாஜியும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கே.டி. ராஜேந்திர பாலாஜி சாலையோரம் உள்ள கடையில் அமா்ந்து தேநீா் அருந்திவிட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

இலையையும், தாமரையையும் பிரிக்க முடியாது. இலை எங்கு இருக்கிறதோ அங்கு தாமரை இருக்கும். மத்தியில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் இருக்க வேண்டும். பிரிசில்லா பாண்டியன் வழக்குரைஞா், படித்தவா், அனைவரையும் மதிக்கக் கூடியவா். எனவே, அவா் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி.

ராஜபாளையத்தில் கடந்த இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து, மக்களை ஏமாற்றி வருபவா் மீண்டும் வெற்றி பெறக் கூடாது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

இதில் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.