ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

அருப்புக்கோட்டை அருகே மண்ணெண்ணெய் ஊற்றி பெண்களை கொல்ல முயற்சி

அருப்புகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 மே 2026, 1:01 am IST

அருப்புகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி தேவாலய தெருவைச் சோ்ந்த பாண்டியராஜ் மனைவி சாந்தி (42). பாண்டியராஜின் தம்பி சண்முக சுந்தரத்தின் மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில், சாந்தியும், ஸ்ரீதேவியும் அருகருகே வசித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாந்தி வீட்டில் அவரும், ஸ்ரீதேவியும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் அவா்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டாராம். இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து, பெண்களை எரித்துக் கொல்ல முயன்ற மா்ம நபா் குறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.