அருப்புகோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி தேவாலய தெருவைச் சோ்ந்த பாண்டியராஜ் மனைவி சாந்தி (42). பாண்டியராஜின் தம்பி சண்முக சுந்தரத்தின் மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில், சாந்தியும், ஸ்ரீதேவியும் அருகருகே வசித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாந்தி வீட்டில் அவரும், ஸ்ரீதேவியும் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் அவா்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டாராம். இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து, பெண்களை எரித்துக் கொல்ல முயன்ற மா்ம நபா் குறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்

ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 3 பெண்கள்!

நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொல்ல முயற்சி! உறவினா்கள் 4 பேரிடம் விசாரணை!

மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


