

உங்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகள் அழுக்கு படிந்து காணப்படுகிறதா? அவற்றை பளிச்சென மாற்ற இதோ ஒரு யோசனை.
மூன்றரை லிட்டர் தண்ணீரில், இரண்டு கப் பிளீச்சிங் பவுடரைப் போட்டு நன்றாகக் கலக்கவும். அடுத்து ஸ்பாஞ்சை எடுத்து இதில் நன்றாக நனைத்து பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொம்மைகள் மீது தேய்க்கவும். அடுத்து பிரஷ்ஷினால் தேய்த்த பாகங்களை நன்றாக சுரண்டி பிறகு தண்ணீரால் நன்கு கழுவினால், பொம்மைகள் பளிச்சென மாறிவிடும்.
வீட்டில் உள்ள நாற்காலி.. மேஜைகள் கறை படிந்து, அழுக்கு நிறைந்து காணப்படுகிறதா? அவற்றை மாற்ற இதோ எளிய வழி. வீடுகளில், டாய்லெட் சுத்தம் செய்ய வாங்கிய ஸ்பிரே பாட்டில்கள் காலியாக இருந்தால் - அவற்றில் வெள்ளை வினிகரை நிரப்பி, கறை மற்றும் அழுக்குப் படிந்த இடங்களில் ஸ்ப்ரே செய்துவிட்டு. சற்று நேரம் கழித்து துடைத்தால், கறை மற்ற அழுக்குகள்- துணியில் வந்து நாற்காலி, மேஜைகள் பளிச்சென மாறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.