தலைவர்,உறுப்பினர்கள்,பணியாளர்களைக் கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் துணிப்பைகளைப் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல், விழிப்புணர்வு சுவரொட்டிகளை முக்கிய இடங்களில் ஒட்டுதல், பள்ளிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்துதல், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த கண்காட்சி அமைத்தல், விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்துதல், சைக்கிள் பேரணி நடத்துதல் என்பன உள்ளிட்ட 32 வகையான நடவடிக்கைகள் மூலம் பிளாஸ்டிக் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.