சிரி... சிரி...

''பொண்ணுக்கு கொஞ்சம் வாய் நீளம். பரவாயில்லையா தம்பி...''''அதை எங்க அம்மா சரி பண்ணிடுவாங்க.. அவங்களுக்கும் கை நீளம்தான். தரகர் சார்...''
சிரி... சிரி...


''இந்தப் பெண்ணுக்கு ஹிந்தி, தெலுங்குன்னு பல மொழிகள் தெரிஞ்ச மாப்பிள்ளைதான் வேணுமுன்னு அடம்பிடிக்கிறா?''
''எதுக்கு...''
''தன்னுடைய அழகை வர்ணிக்க பல மொழிகளில் பேசற மாப்பிள்ளைதான் வேணுமாம்!''




''மணப்பெண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டான்னா பாருங்களேன்..''
''நிஜமாவா?''
''ஆமாம். எப்ப பார்த்தாலும் வாட்ஸ் ஆஃப், யூ டியூப் 
பார்த்துகிட்டே இருப்பா?''

-தீபிகா சாரதி, சென்னை.

''தரகர் தொழிலை விட்டுவிடலாமுன்னு இருக்கேன்..''
''கல்யாணம் பண்ணுற நல்ல காரியம் செய்கிறீங்க ஏன் சார் இந்த முடிவு..''
''நிறைய பேரோட வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறேனே..''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

''ஆறுமுகம் நினைச்ச மாதிரியே அவரோட மகளுக்கு வீட்டோட மாப்பிள்ளை அமைந்ததாமே.. உண்மையா?''
''ஆமாம். முதியோர் இல்லத்துல இருந்த மாப்பிள்ளையாம். அதான்!''

-கு. அருணாசலம், தென்காசி.

''மாப்பிள்ளை கஞ்ச பேர்வழின்னு எப்படி சொல்றே?''
''சாப்பிடுற மாதிரி கனவு வந்தாகூட அடுத்த வேளை சாப்பிட மாட்டாரு?''

- எஸ்.மாரிமுத்து, சிட்லபாக்கம்.

''வயசானவங்களை குடி வைச்சா தலைவலின்னு புதுமண ஜோடிக்கு வீட்டை வாடகை விட்டது தப்பாயிடுச்சி..''
''ஏன் என்ன ஆச்சு..''
''தினமும் சண்டை போட்டு எங்களை சாக அடிக்கிறாங்க?''



''பொண்ணுக்கு கொஞ்சம் வாய் நீளம். 
பரவாயில்லையா தம்பி...''
''அதை எங்க அம்மா சரி பண்ணிடுவாங்க.. அவங்களுக்கும் கை நீளம்தான். தரகர் சார்...''



''பையன் பிரஸ் நடத்தறான் சார்...''
''மாசம் எவ்வளவு பணம் கிடைக்கும் தரகரே..''
''பிரின்ட் பண்ணதைப் பொறுத்துதான்!''



''என்ன டார்லிங்.. நம்ம திருமணத்துக்கு எங்க அம்மாவும் அப்பாவும் சம்மதிச்சிட்டாங்க..''
''பராவாயில்லையே. ஆனா என் மனைவியும்,  குழந்தைகளும் சம்மதிக்க மாட்டங்களே!''



''பெண்ணோட அப்பா யாரையும் நம்ம மாட்டாராம்..''
''எப்படி சொல்றே?''
''அவரே மொய் பணத்தை வசூல் பண்றான்னா பார்த்துக்கோங்க?''



''எது எப்படி வந்ததோ  அது அப்படியோ போகும்டா?''
''என்னடா பெரிய உபதேசம் சொல்றே..?''
''ஒரு கல்யாணத்துல திருடிய செருப்பு அடுத்த கல்யாணத்துல போயிடிச்சிடா?''



''இந்த வயசுல கூட அந்த தாத்தாவும் பாட்டியும் பீச்சுல சந்தோஷமா உட்கார்ந்து பேசிட்டே இருக்காங்களே!''
''அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு வீட்டுல சம்மதம் இல்லாததால், காதலர்களாகவே இருக்காங்கடா?''

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com