1977 பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக தில்லி சாத்தினி செளக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கந்தர் பக்த், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, வீட்டுவசதித் துறை கேபினட் அமைச்சரானார். 1980-இல் ஜனதா கட்சி பிளவுபட்டபோது, சிக்கந்தர் பக்த் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக, கட்சியின் துணைத் தலைவராக, மாநிலங்களவைக் கட்சித் தலைவராக, வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக என்று பல்வேறு பதவிகள் வகித்து, கடைசியில் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.