எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உள்ளம் கொள்ளை போகும் உறையூர் காட்டன் சேலைகள்!

பெண்களுக்குச் சேலையும், நகையும் மிகவும் பிடிக்கும். அதிலும் இளம்பெண்களுக்கு கைத்தறி நெசவில் செய்யப்பட்ட காட்டன் சேலைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

News image

சேலைகள்

Updated On :15 பிப்ரவரி 2025, 8:02 pm IST

பெண்களுக்குச் சேலையும், நகையும் மிகவும் பிடிக்கும். அதிலும் இளம்பெண்களுக்கு கைத்தறி நெசவில் செய்யப்பட்ட காட்டன் சேலைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அந்த வகையில், திருச்சி அருகே 'உறையூர் காட்டன் சேலைகள்' மிகவும் பிரசித்தம்.

இவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் வி.கே.டி. சில்க்ஸ் அன்ட் சேரீஸ் உரிமையாளர் ஆர்.சுப்பிரமணியத்திடம் பேசியபோது:

'உறையூரில் ஜவுளிக் கடை வைத்திருந்த ஒருவரிடம் வேலை செய்து வந்தேன். அவர் கடையைவிட்டு விட்டு வேறு தொழிலை நடத்தியதால் நான் கடையை வாங்கினேன். இங்கு பெண்களுக்கான சேலைகளை மட்டும் விற்பனை செய்கிறோம்.

திருச்சியைச் சுற்றியுள்ள தோகைமலை, பைத்தம்பாறை, முசிறி, மணமேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான தறிகளில் உறையூர் காட்டன் சேலைகள் தயாரிக்கப்பட்டன. முழுக்க, முழுக்க கைத்தறிகளால் மட்டும் தயாரிக்கப்பட்ட இந்தச் சேலைகள் இளம்பெண்களைக் கவர்ந்ததால், நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்டன.

மாதமொன்றுக்கு சுமார் பத்தாயிரம் சேலைகளுக்கு மேல் பல்வேறு இடங்களுக்கும் உறையூர் காட்டன் சேலைகள் அனுப்பப்பட்டன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. உறையூர் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தரமான நூல், தரமான சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடைவதற்குக் காரணம்.

கூறைப்புடவைக்கு உறையூர் காட்டன் சேலைகள் மிகவும் பிரபலம். கைத்தறி என்பதால் சேலைகள் சுருங்குவதில்லை என்பதால் இப்போதைய இளம்பெண்களின் விருப்பமாக இது திகழ்கிறது.

பிராமணப் பெண்களின் காட்டன் சேலைகளில் முதல் தேர்வாக உறையூர் காட்டன் சேலை விளங்குகிறது. சேலைகளில் மிகவும் எளிதான டிசைன்களாக இருப்பதால் துவைப்பதற்கும் எளிதாக உள்ளது.

ஒருகாலத்தில் பல ஆயிரம் தறிகள் இருந்த இடத்தில் இப்போது சில நூறு தறிகளே உள்ளன. ஊதியம் மிகவும் குறைவாகக் கிடைப்பதால் இளைஞர்கள் பலர் தறி நெசவை விட்டு வெளியேறிவிட்டனர். உறையூர் காட்டன் சேலைகள் விலை சுமார் ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்கப்படுகிறது.

ஒரு குடும்பமாக அமர்ந்து சேலை நெய்கின்றனர். பெண்களும் நெசவு செய்து வருமானமீட்டுவது பாராட்டுக்குரியது.

ஆனாலும் எங்களுக்கு சொந்தத் தறிகள் உள்ளதாலும் கடை உள்ளதாலும் தொடர்ந்து இந்தச் சேலைகளைத் தயாரித்து வருகிறோம்.

அரசு உரிய பயிற்சியை அளித்து மானியம் தந்தால் புகழ் பெற்ற உறையூர் காட்டன் சேலைகள் உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும்.

திருச்சி பகுதியில் உள்ள பல்வேறு சமூகத்தினர் தங்கள் விசேஷங்களுக்குத் தகுந்தாற்போல உறையூர் காட்டன் சேலைகளை நெய்யச் சொல்லியும் ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்' என்கிறார் சுப்பிரமணியம்.

' உறையூர் காட்டன் சேலைகள் கட்டங்கள், மற்றும் பிளெய்னாகவும் கிடைக்கின்றன. இதனால்தான் இளம் பெண்களின் விருப்பத் தேர்வாகவும் இது திகழ்கிறது. கைத்தறி நெசவுக் கலையின் மீதான ஈடுபாட்டை இளைஞர்களிடம் ஊட்டி அவர்களுக்குக் கற்றுத் தந்தால் சேலைகள் உற்பத்தியில் மேலும் பல புதுமைகளைப் புகுந்த முடியும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர் நெசவாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.