ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசத்தும் சகோதரிகள்...

திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட ஆன்மிகப் பாடல்களைப் பாடி அசத்தி வருகின்றனர் சகோதரிகள் லித்திகாஸ்ரீ, தேவிஸ்ரீ.

News image
Updated On :18 ஜனவரி 2025, 6:35 pm

DIN, எம். அருண்குமார்

திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட ஆன்மிகப் பாடல்களைப் பாடி அசத்தி வருகின்றனர் சகோதரிகள் லித்திகாஸ்ரீ, தேவிஸ்ரீ. அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள்கள்.

பத்து வயதான லித்திகாஸ்ரீ தேவலாபுரம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும், எட்டு வயதான தேவிஸ்ரீ அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் கூறியது:

'இருவரும் சிறுவயதிலேயே திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, விநாயகர் அகவல், பகவத் கீதை, கோளறு திருப்பதிகம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை எனது மனைவி தமிழ்ச்செல்வியிடம் கற்கத் தொடங்கினர். பின்னர், ஆன்மிகம் தொடர்பான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற பாவை விழாவில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான முதல் பரிசை இருவரும் பெற்றனர். சின்மயா மிஷன் சார்பில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண போட்டியிலும் பரிசு பெற்றனர்.

இதுதவிர, பள்ளியில் நடைபெறும் பேச்சு போட்டியிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றுவருகின்றனர்' என்கிறார் மீனாட்சிசுந்தரம்.

மோ. தமிழ்ச்செல்வி கூறியது:

'இருவரும் சிறு வயது ஆன்மிகப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வமும், ஈடுபாடும் காட்டியதால் அவர்களுக்கு திருக்குறள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்து வரலாற்று கதைகளையும், ஆன்மிகக் கதைகளையும் கூறி வந்தேன்.

தொடர்ந்து அவர்களுக்கு திருக்குறள், திருப்பாவை திருவெம்பாவை, விநாயகர் அகவல், பகவத் கீதை, கோளறு திருப்பதிகம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை கற்றுத் தந்தேன்.

இருவரும் நல்ல ஞாபகத்துடன் அவற்றை பயின்று அச்சு பிசகாமல் பாடி வருகின்றனர். சிறு வயதிலேயே தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்களையும், பன்னிரு ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் பெயர்களையும் ஞாபகத்தில் வைத்து கூறி வருக்கின்றனர்.

தற்போது மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி அதுகுறித்து காணொலிகளை சமூக ஊடகங்களில் தினமும் பதிவிட்டு வருகின்றனர்' என்றார் தமிழ்ச்செல்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.