48 வயதாகிறது. ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த மாதம் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு சீழ் வைத்துக் கொண்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின், புண் ஆறிவிட்டாலும், நீர் வடிந்து கொண்டே இருக்கிறது.
மருத்துவ பரிசோதனையில் காசநோய் தாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
- எம். சக்கீனா, திண்டுக்கல்.
முதலில் சிகிச்சை மூலம் உங்களது காசநோயைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். அடுத்ததாக, நீங்கள் செய்ய வேண்டியது, முறையாக தவறாது மருந்துகளை எடுத்துக்கொள்வது மற்றும் உகந்த உணவுப்பழக்கவழக்கங்களின் மூலம் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.