மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 8 உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 8 உணவுகள்!

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் மீண்டும் சூடுப்படுத்தும்போது நைட்ரைட்டாக மாறும்.

கீரை: கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் மீண்டும் சூடுப்படுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது , புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

முட்டை: முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒரு முறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்தும்விட்டு, தேவைப்படும் போது எடுத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும். வாந்தி, குமட்டல் உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

சிக்கன்: கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டின் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது அதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். அதுவே 2 வது முறை சூடு செய்யும்போது அது புட் பாய்சனாக மாறிவிடும். எனவே, அதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்: காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவது சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதை, மீண்டும் சூடு படுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சமையல் எண்ணெய் : எந்த வகை சமையல் எண்ணெய்யாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெய்யின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அது புற்று நோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

சாப்பாடு: அரிசி சாதம் நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஓர் உணவுப் பொருள் சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

பீட்ரூட் : பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போன்று நிறைய நைட்ரேட்ûஸ உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com