பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

 சப்பாத்தி உப்புமா 

சுவையான சப்பாத்தி உப்புமா..

News image
Updated On :17 ஜூன் 2021, 5:14 pm IST



தேவையானவை :
சப்பாத்தி - 6
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை : சப்பாத்தியை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்து மல்லி தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சப்பாத்தி துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இறக்கினால் சப்பாத்தி உப்புமா தயார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.