தேவையானவை :
பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு,
உளுத்தம் பருப்பு - தலா 1கிண்ணம்
கொள்ளு - 1 கிண்ணம்
சோயா - 1 கிண்ணம்
வரமிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை : வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, கொள்ளு, சோயா அனைத்தையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பொருள்களுடன் மிளகாய்,
சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலையையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான சத்து மாவு அடை ரெடி.