இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மகளிர் தின கொண்டாட்டம்

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :3 மார்ச் 2021, 12:30 am

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள்.  சாதனை படைத்த பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெளரவிக்கிறார்கள். 

மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்குப் பின்னால்  வரலாறும் உள்ளது. அந்த வரலாறு தான் என்ன?

1857-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் நியூயார்க் ஜவுளி தொழிலில் ஈடுபட்ட பெண்களின் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது  1911-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி. தெரசா மால்கீல் மற்றும் ஏர்லா சலாஜர் ஆகியோரது ஆலோசனைப்படி அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி மகளிர் தினத்தை அறிவித்தது.

1910 -ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. கிளாரா ஜெட்கின் (ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிக்கான மகளிர் அலுவலகத்தின் தலைவர்) சர்வதேச மகளிர் தின யோசனையை முன்வைத்தார். 

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் - ஒரு மகளிர் தினம் - அவர்களின் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆலோசனையை ஏகமனதான ஒப்புதலுடன் வரவேற்றனர். 

இதனால் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, டென்மார்க், ஆஸ்திரியா (ஐரோப்பா), ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் முதன் முறையாக 1911-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

2011- சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கண்டது.

முன்னாள் அமெரிக்க அதிபர்  பராக் ஒபாமா மார்ச் 2011 -ஆம் ஆண்டை "மகளிர் வரலாற்று மாதம்' என்று அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. 

பல நாடுகளில் ஆண்கள் தங்கள் தாய்மார்கள், மனைவிகள், தோழிகள், சகாக்கள் போன்றவர்களைப் பூக்கள் மற்றும் சிறிய பரிசுகளுடன் கௌரவிக்கிறார்கள். 

பெண்களை ஆண்டுதோறும் கெளரவிக்கும் விதமாக மார்ச் 8-ஆம் தேதி கூகுள் தனது தேடுதல் இயந்திரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தும் வகையில் தனது கூகுள் எழுத்துகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச மகளிர் தினத்துக்கு மரியாதை செலுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.