ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். சாதனை படைத்த பெண்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெளரவிக்கிறார்கள்.
மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்குப் பின்னால் வரலாறும் உள்ளது. அந்த வரலாறு தான் என்ன?
1857-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் நியூயார்க் ஜவுளி தொழிலில் ஈடுபட்ட பெண்களின் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 1911-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி. தெரசா மால்கீல் மற்றும் ஏர்லா சலாஜர் ஆகியோரது ஆலோசனைப்படி அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி மகளிர் தினத்தை அறிவித்தது.
1910 -ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. கிளாரா ஜெட்கின் (ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிக்கான மகளிர் அலுவலகத்தின் தலைவர்) சர்வதேச மகளிர் தின யோசனையை முன்வைத்தார்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் - ஒரு மகளிர் தினம் - அவர்களின் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
17 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆலோசனையை ஏகமனதான ஒப்புதலுடன் வரவேற்றனர்.
இதனால் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, டென்மார்க், ஆஸ்திரியா (ஐரோப்பா), ஜெர்மனி மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் முதன் முறையாக 1911-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
2011- சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கண்டது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மார்ச் 2011 -ஆம் ஆண்டை "மகளிர் வரலாற்று மாதம்' என்று அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.
பல நாடுகளில் ஆண்கள் தங்கள் தாய்மார்கள், மனைவிகள், தோழிகள், சகாக்கள் போன்றவர்களைப் பூக்கள் மற்றும் சிறிய பரிசுகளுடன் கௌரவிக்கிறார்கள்.
பெண்களை ஆண்டுதோறும் கெளரவிக்கும் விதமாக மார்ச் 8-ஆம் தேதி கூகுள் தனது தேடுதல் இயந்திரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தும் வகையில் தனது கூகுள் எழுத்துகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச மகளிர் தினத்துக்கு மரியாதை செலுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகாசி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 5-இல் தொடக்கம்

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!

நீட் தேர்வு: மீண்டும் வினாத்தாள் கசிந்தால் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



