கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கத்திரிக்காய் மிளகாய்  பொடி வறுவல்

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை

News image
Updated On :17 நவம்பர் 2021, 12:30 am

தவநிதி


தேவையானவை: 

சின்ன கத்திரிக்காய் - 10
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
நல்ல எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி துருவி அறைத்தது 
கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது 
மிளகாய் பொடிக்கு: கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
மல்லி - 3 தேக்கரண்டி 
எள் - 5 தேக்கரண்டி
வரமிளகாய் - 10
மிளகு -  அரை தேக்கரண்டி
புளி கரைசல் - கால் கிண்ணம்
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி


செய்முறை: 

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை  மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டவும், அதை வாணலியில் சிறிது நல்லஎண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.

பிறகு மீதம் உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும்.

கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த மிளகாய்ப் பொடி கலவையை சீராக தூவி வெட்டி வைத்த கொத்துமல்லியை தூவி இறக்கவும். இதை கொஞ்சம் ரசம் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட  சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.