பச்சைப்பட்டாணி சுண்டல்
பச்சைப் பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.


தேவையானவை:
பச்சைப் பட்டாணி - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
மேலே தூவுவதற்கு:
நறுக்கிய மல்லித்தழை - 2 தேக்கரண்டி
செய்முறை:
பச்சைப் பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2 தேக்கரண்டி, எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவி கலந்துவிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...