கர்நாடகாவின், தாவணகெரே மாவட்டத்தில் சாலை வசதி சரியில்லாததால், மாணவர்கள் தினமும் 14 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் பல பெண் குழந்தைகள் தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடும் நிலை உள்ளது.
இதனை நினைத்து மனம் உடைந்த 26-வயதான பிந்து எனும் பெண், தங்களது ஊருக்கு சாலை வசதி அமைத்துக் கொடுக்கும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏனென்றால், தானும் திருமணமாகி சென்றுவிட்டால் தங்களது ஊருக்காகவும், மக்களுக்காக குரல் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள் என்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அவருக்கு உறுதியளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும்: குஜராத் துணை முதல்வர்

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் பெண்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கு: பூலாம்பட்டி கதவணை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



