விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எளிய அழகுக் குறிப்புகள்!

உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.

News image
Updated On :17 ஜூன் 2021, 12:12 pm


 உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.
 இளஞ்சூடான  பாலுடன்  ஒரு தேக்கரண்டி  தேனைக் கலந்து  முகம் மற்றும்  கழுத்துப்  பகுதிகளில்  பூசி பத்து  நிமிடங்கள் கழித்து  கழுவினால்  முகம்  பளபளப்பாகும்.
 நன்கு  பழுத்த  பப்பாளி  பழத்தின்  சாறை  முகத்தில்  தேய்த்தால்  வடுக்கள் மாறி முகம் பொலிவு  பெறும்.
 தயிரை  முகத்தில்  பூசி  ஊற வைத்துக் குளித்தால்  முகம்  பளபளப்பாகும்.
 ஆரஞ்சு பழத்தோலை  காய வைத்து  பொடி செய்து  அதை மோரில்  கலந்து  பூசி வர  முகம் பளபளப்பாகும்.
 பாலுடன்  சில துளிகள்  கிளசரின்  மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து  முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
 பாலேட்டை  நன்றாக  தேய்த்து ஊறவிட்டு  முகம் கழுவ  முகம் மென்மையுடன் பிரகாசமாகும்.
 கேரட் , ஆரஞ்சு  சாற்றுடன்  தேன் மற்றும்  பால் கலந்து  முகத்தில் தடவி  பதினைந்து  நிமிடங்கள் கழித்து  கழுவ வேண்டும்.
 வெள்ளரிச் சாற்றை  முகத்தில்  தேய்த்து சிறிது நேரம்  கழித்து கழுவ முகம் பளீரென்று இருக்கும். 
 ஆரஞ்சுப் பழச் சாற்றை  முகத்தில் பூசி இருபது நிமிடங்கள்  கழித்து  பயிற்றம் பருப்பு மாவை  கொண்டு  தேய்த்து  முகம்  கழுவினால்  முகத்திற்கு  நல்ல பொலிவு கிடைக்கும்.
 காய்ச்சாத பாலை  பஞ்சில்  தொட்டு  முகம்  முழுவதும்  பூசி  அரைமணி நேரம்  கழித்துக்  கழுவினால்  முகம்  பளபளப்பாகவும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.
 பாதாம்  பருப்பை  பால்விட்டு  அரைத்து  முகத்தில்  தடவி  இருபது  நிமிடங்கள்  கழித்து  கழுவ வேண்டும்.  முகத்திற்கு  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 வாழைப் பழத்தை  கூழாக்கி  அதனுடன் தேனைக் கலந்து பூசி  வர முகம்  பளபளப்பாகும்.
 கடலைமாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து  முகத்தில்  தடவி  குளித்தால்  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 தக்காளியை  இரண்டாக  வெட்டி முகத்தில்  தேய்த்து  உலர வைத்து  கழுவ வேண்டும்.  முகம் பளபளப்பாகும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.