மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எளிய அழகுக் குறிப்புகள்!

உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.

News image
Updated On :17 ஜூன் 2021, 12:12 pm

தினமணி


 உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.
 இளஞ்சூடான  பாலுடன்  ஒரு தேக்கரண்டி  தேனைக் கலந்து  முகம் மற்றும்  கழுத்துப்  பகுதிகளில்  பூசி பத்து  நிமிடங்கள் கழித்து  கழுவினால்  முகம்  பளபளப்பாகும்.
 நன்கு  பழுத்த  பப்பாளி  பழத்தின்  சாறை  முகத்தில்  தேய்த்தால்  வடுக்கள் மாறி முகம் பொலிவு  பெறும்.
 தயிரை  முகத்தில்  பூசி  ஊற வைத்துக் குளித்தால்  முகம்  பளபளப்பாகும்.
 ஆரஞ்சு பழத்தோலை  காய வைத்து  பொடி செய்து  அதை மோரில்  கலந்து  பூசி வர  முகம் பளபளப்பாகும்.
 பாலுடன்  சில துளிகள்  கிளசரின்  மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து  முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
 பாலேட்டை  நன்றாக  தேய்த்து ஊறவிட்டு  முகம் கழுவ  முகம் மென்மையுடன் பிரகாசமாகும்.
 கேரட் , ஆரஞ்சு  சாற்றுடன்  தேன் மற்றும்  பால் கலந்து  முகத்தில் தடவி  பதினைந்து  நிமிடங்கள் கழித்து  கழுவ வேண்டும்.
 வெள்ளரிச் சாற்றை  முகத்தில்  தேய்த்து சிறிது நேரம்  கழித்து கழுவ முகம் பளீரென்று இருக்கும். 
 ஆரஞ்சுப் பழச் சாற்றை  முகத்தில் பூசி இருபது நிமிடங்கள்  கழித்து  பயிற்றம் பருப்பு மாவை  கொண்டு  தேய்த்து  முகம்  கழுவினால்  முகத்திற்கு  நல்ல பொலிவு கிடைக்கும்.
 காய்ச்சாத பாலை  பஞ்சில்  தொட்டு  முகம்  முழுவதும்  பூசி  அரைமணி நேரம்  கழித்துக்  கழுவினால்  முகம்  பளபளப்பாகவும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.
 பாதாம்  பருப்பை  பால்விட்டு  அரைத்து  முகத்தில்  தடவி  இருபது  நிமிடங்கள்  கழித்து  கழுவ வேண்டும்.  முகத்திற்கு  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 வாழைப் பழத்தை  கூழாக்கி  அதனுடன் தேனைக் கலந்து பூசி  வர முகம்  பளபளப்பாகும்.
 கடலைமாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து  முகத்தில்  தடவி  குளித்தால்  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 தக்காளியை  இரண்டாக  வெட்டி முகத்தில்  தேய்த்து  உலர வைத்து  கழுவ வேண்டும்.  முகம் பளபளப்பாகும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.