டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

எளிய அழகுக் குறிப்புகள்!

உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.

News image
Updated On :17 ஜூன் 2021, 5:42 pm IST


 உருளைக்கிழங்கு  சாற்றுடன்  சமஅளவு  தேன் கலந்து முகத்தில்  தடவி  அரைமணி நேரம்  கழித்து  கழுவ முகம்  பளிச்சென இருக்கும்.
 இளஞ்சூடான  பாலுடன்  ஒரு தேக்கரண்டி  தேனைக் கலந்து  முகம் மற்றும்  கழுத்துப்  பகுதிகளில்  பூசி பத்து  நிமிடங்கள் கழித்து  கழுவினால்  முகம்  பளபளப்பாகும்.
 நன்கு  பழுத்த  பப்பாளி  பழத்தின்  சாறை  முகத்தில்  தேய்த்தால்  வடுக்கள் மாறி முகம் பொலிவு  பெறும்.
 தயிரை  முகத்தில்  பூசி  ஊற வைத்துக் குளித்தால்  முகம்  பளபளப்பாகும்.
 ஆரஞ்சு பழத்தோலை  காய வைத்து  பொடி செய்து  அதை மோரில்  கலந்து  பூசி வர  முகம் பளபளப்பாகும்.
 பாலுடன்  சில துளிகள்  கிளசரின்  மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து  முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
 பாலேட்டை  நன்றாக  தேய்த்து ஊறவிட்டு  முகம் கழுவ  முகம் மென்மையுடன் பிரகாசமாகும்.
 கேரட் , ஆரஞ்சு  சாற்றுடன்  தேன் மற்றும்  பால் கலந்து  முகத்தில் தடவி  பதினைந்து  நிமிடங்கள் கழித்து  கழுவ வேண்டும்.
 வெள்ளரிச் சாற்றை  முகத்தில்  தேய்த்து சிறிது நேரம்  கழித்து கழுவ முகம் பளீரென்று இருக்கும். 
 ஆரஞ்சுப் பழச் சாற்றை  முகத்தில் பூசி இருபது நிமிடங்கள்  கழித்து  பயிற்றம் பருப்பு மாவை  கொண்டு  தேய்த்து  முகம்  கழுவினால்  முகத்திற்கு  நல்ல பொலிவு கிடைக்கும்.
 காய்ச்சாத பாலை  பஞ்சில்  தொட்டு  முகம்  முழுவதும்  பூசி  அரைமணி நேரம்  கழித்துக்  கழுவினால்  முகம்  பளபளப்பாகவும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.
 பாதாம்  பருப்பை  பால்விட்டு  அரைத்து  முகத்தில்  தடவி  இருபது  நிமிடங்கள்  கழித்து  கழுவ வேண்டும்.  முகத்திற்கு  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 வாழைப் பழத்தை  கூழாக்கி  அதனுடன் தேனைக் கலந்து பூசி  வர முகம்  பளபளப்பாகும்.
 கடலைமாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து  முகத்தில்  தடவி  குளித்தால்  நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
 தக்காளியை  இரண்டாக  வெட்டி முகத்தில்  தேய்த்து  உலர வைத்து  கழுவ வேண்டும்.  முகம் பளபளப்பாகும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.