அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய நலவாழ்வு குழும பணியில் திருநங்கை!

தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 6:30 pm

ரிஷி

தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் ஆவார். தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இவற்றில் சென்னையில் தமிழ்ச்செல்வி பணிபுரிய உள்ளார். இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வழங்கினார். 

முதல் துபாஷி
தமிழக  சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் சபாநாயகரின் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை சட்டமன்ற  அலுவலகத்தில்   1990- ஆம்  ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்த  ராஜலட்சுமி  என்பவர் சபாநாயகர் அப்பாவுக்கு உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தற்போது, 60 வயதாகும் அவர், மே மாதம் பணி நிறைவு பெறவுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

வழக்கமாக ஆண்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தநிலையில், பெண் ஒருவர் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். எனவே,  இதன்மூலம் ராஜலட்சுமி  சபாநாயகரின் முதல் பெண் உதவியாளராக கருதப்படுகிறார். ராஜலட்சுமி துபாஷ் சீருடையில் இருக்கும்  படங்கள் இணையதளத்தில்  வைரலாகி வருகிறது. 

மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!

கல்பனா சாவ்லா விருது பெற்ற மருத்துவர்  ப.சண்முகப்பிரியா, மதுரை அனுப்பானடி  அரசு நகர்ப்புற  ஆரம்ப  சுகாதார  மையத்தில்  மருத்துவ அலுவலராக  இருந்தவர்.  துணிவு,  தைரியத்துடன் கரோனா  நோய்ப் பரவலில் மருத்துவ சேவை செய்தவர். இரண்டாவது அலையின் போது 582  காய்ச்சல் முகாம்களில்  பங்கேற்று  10,961 பேருக்கு  ஸ்வாம்  சோதனை  மாதிரிகளை சேகரித்தவர். கரோனா  தொற்றுக்கு  ஆளாகி  2021, மே மாதம் காலமானார்.

இவரது சேவையைப் போற்றும் வகையில்  கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.