ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையலில் ருசியை அதிகரிக்க.... 

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 6:30 pm

சப்பாத்தி செய்யும் பொழுது மாவுடன் கொஞ்சம் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை பொடித்து சேர்த்தால் மிருதுவான சுவை மிகுந்த சப்பாத்தி தயார். இவை எளிதில் ஜீரணமாகக் கூடியது ஆகும்.

ஆப்ப மாவு கொண்டு ஆப்பம் சுடுவதற்கு முன்பு மாவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்தால் சீக்கிரம் ஆப்பம் காயாமல் இருக்கும்.

புதினா துவையல், கொத்துமல்லி துவையல் போன்றவற்றை செய்யும் பொழுது புளி சேர்ப்பதற்கு பதிலாக மாங்காய் துண்டுகளாக வெட்டி சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும், மணமும் அட்டகாசமாக இருக்கும்.

பருப்பு சேர்த்து கீரை கடையும் பொழுது கொஞ்சம் பால் சேர்த்து கடைந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

ரவா இட்லி தயாரிக்கும் பொழுது ஒரு கைப்பிடி சேமியாவை வெறும் வாணலியில் வறுத்து தயிரில் 10 நிமிடம் ஊற வைத்து கலந்து பின் அவித்து பாருங்கள், ருசி கூடுதலாக இருக்கும்.

தோசை மாவு தனியாக அரைக்கும் பொழுது அதனுடன் கொஞ்சம் வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து அரைத்து பாருங்கள், தோசை
மிருதுவாக மெத்தென்று வரும்.

வெங்காய பக்கோடா வீட்டில் செய்யும் பொழுது அதனுடன் கொஞ்சம் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்தால் பக்கோடா செம டேஸ்டாகஇருக்கும்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு வேக வைத்த சாதத்தை சேர்த்து அரைத்தால் இட்லி, தோசை எதுவாக இருந்தாலும் மெத்தென்று மிருதுவாக வரும்.

சாம்பார் செய்யும் போது திடீரென தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் கொஞ்சம் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கி சாம்பாருடன் சேர்த்து பாருங்கள், கெட்டியான சாம்பார் கூடுதல் ருசியுடன் தயார்.

காலிஃப்ளவர் செய்யும் பொழுது அதன் பச்சை வாசம் சிலருக்கு பிடிக்காது. இது போன்ற சமயத்தில் பால் சேர்த்து தயாரித்துப் பாருங்கள், பச்சை வாசம் நீங்கும்.

காய்கறிகள் செய்யும் பொழுது இறுதியாக சேர்ப்பதற்கு தேங்காய் இல்லை என்றால் அதற்கு பதிலாக கொஞ்சம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டு வறுத்து மாவாக்கிவைத்துக் கொண்டால் தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம்.

தேங்காய்ப் பால் அரைக்க நேரம் இல்லாத சமயங்களில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்துப் பாதி ஆறியதும், தேங்காயை எடுத்து பிழிந்தால் சுலபமாக தேங்காய்ப் பால் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.