நாம் தினமும் சாலையில் செல்லும்போது ஏராளமானவர்களை கடந்து செல்கிறோம். அதில் பலர், வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர்தான் ஜபல்பூரைச் சேர்ந்த 81வயதான சாந்திபாய் யாதவ் பாட்டி. இந்த தள்ளாத வயதிலும் இவர், தனது வாழ்வாதரத்திற்காக, தினந்தோறும் 22 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பல வீடுகளில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறார்.