தேவையானவை:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கிண்ணம்
காலிஃப்ளவர் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கோதுமை மாவு - 2 கிண்ணம்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கோதுமை மாவு, கரம் மசாலா, எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
பிசைந்த உடனேயே சப்பாத்தி போல் திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். சுவையான ஆனியன் கோபி பராத்தா தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.