ரவா தோசை செய்யும்போது, ரவையை நன்றாக வறுத்து பிறகு ஊற வைத்து சிறிது மைதா மாவுடன் கலந்து மற்ற பொருள்களையும் சேர்த்து தோசை வார்த்தால் பட்டுப் போல எடுக்க வரும்.
கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புக்குப் பதில் வேர்க்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சிறப்பாக இருக்கும்.
பருப்புப் பொடி அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து கொண்டால், ருசியாக இருக்கும்.
தோசை மெல்லியதாக நன்றாக வர வேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று மெல்லிய தோசை வரும்.