மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையல் டிப்ஸ்...

தக்காளி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் சிறு பூச்சிகள் இருக்கும். அவைகளை உப்பு கலந்த தண்ணீருக்குள் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டு, அதன்பின்னர் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

News image
Updated On :18 செப்டம்பர் 2022, 12:30 am

கே. பிரபாவதி


தக்காளி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் சிறு பூச்சிகள் இருக்கும். அவைகளை உப்பு கலந்த தண்ணீருக்குள் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டு, அதன்பின்னர் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காரட்,  பீட்ரூட் வாடி போனால், அவற்றை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால், புதியது போல் ஆகி
விடும். வெட்டவும் எளிதாகிவிடும். 

மாவடு நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க, மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் இருக்கும். நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கோதுமையை லேசாக  வறுத்து மாவாக அரைத்து, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

பூண்டு கெட்டுப் போகாமல் இருக்க, கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் நீண்ட நாள்கள் சுருங்காமலேயே இருக்கும்.

சலித்த சப்பாத்தி மாவுக் கட்டிகளை வீணாக்காமல் அடைமாவில் கலந்து அடை தயாரிக்க, அது சுவையாக இருக்கும்.

கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில், பொட்டுக் கடலை மாவைச்சேர்த்துவிட சீக்கிரம் கெடாது.

உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது வடை தயாரித்தால் மெதுவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.