தேவையானவை:
கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
பச்சரிசி - 1 கிண்ணம்
இட்லி அரிசி - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 5 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் -3
பெருங்காயம் -சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து, அதன் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும். பச்சரிசி, இட்லி அரிசி, கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பின்னர், சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயத்தை அதில் சேர்த்து நன்கு அரைக்கவும். இறுதியில் மாவில் உப்பு சேர்த்து கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.