மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரகடா

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

Updated On :22 ஜூலை 2023, 6:30 pm

தேவையானவை:

உலர்ந்த பட்டாணிக் கடலை-  200 கிராம்
பெரிய வெங்காயம்- 4
பெரிய தக்காளி- 4
இஞ்சி-  1 துண்டு
பச்சை மிளகாய்- 8
பூண்டு-  5 பல்
மாங்காய் பொடி-  5 மேசைக் கரண்டி
கொத்தமல்லி-  அரை கட்டு
சீரகம், தனியா பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா-  தலா 1 மேசைக் கரண்டி
உப்பு, எண்ணெய்-  தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, மிளகாய், வெங்காயம், பூண்டு, மாங்காய் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்க வேண்டும்.

வாணலியில் தேவையான எண்ணெய்விட்டு சீரகத்தைப் போட்டு வெடித்ததும் கரம் மசாலா பொடி, அரைத்த மசாலா விழுது இரண்டையும் போட்டு, பச்சை வாசனை போக நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்க்க வேண்டும். கலவை சற்று கெட்டியானதும் நறுக்கிய தக்காளியை போட வேண்டும். லேசான தீயில் சற்று வைத்திருந்து இறக்கி கொத்தமல்லியை தூவி பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.