தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி- 200 கிராம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
தேங்காய்- அரை மூடி
நல்லெண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலி அரிசி, வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்,. தேங்காயைத் துருவவும். அதோடு, குதிரைவாலி, வெந்தயம் கலந்து அரைக்கவும். உப்பு கலக்கவும். இந்தத் தோசை மாவில் தேங்காய் கலந்திருப்பதால் விரைவில் புளித்துவிடும். இரண்டு மணி நேரம் கழித்து தோசை வார்த்து ருசிக்கலாம்.