தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி- 2 கிண்ணம்
முளைகட்டிய பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
கரம் மசாலா- ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலி அரிசியை களைந்து நீர் வடித்து, மிக்ஸியில் ரவையாகப் பொடிக்கவும். முளை கட்டிய பயத்தம் பயறைச் சேர்க்கவும். கரம் மசாலா, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து துணி போட்ட இட்லித் தட்டில் பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்துவைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்தால் போதும்.