தேவையான பொருள்கள்:
அரிசி மாவு- 200 கிராம்
பச்சை வேர்க்கடலை- 100 கிராம்
உளுந்து மாவு, எள், பெருங்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 5 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, ஒரு துணியில் முறுக்குகளைப் பிழிந்துவிட்டு அதனை கரண்டியால் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி