தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
நறுக்கிய வெந்தயக்கீரை - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
ஓமம் - சிட்டிகை
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
உப்பு, நெய் / வெண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, நறுக்கிய வெந்தயக்கீரை, மஞ்சள் தூள், ஓமம், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். பிறகு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வெண்ணெய் அல்லது நெய் விட்டு மாவை 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். சப்பாத்தியாக இட்டு கல்லின் இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுடச்சுட மணம் மணக்கும் சப்பாத்தி தயார். மேத்தி ரொட்டி என்று அழைக்கப்படும் இதற்குத் தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் ருசியாக இருக்கும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





