தேவையான பொருள்கள்:
முருங்கைக் கீரை 1 கைப்பிடி அளவு
கேழ்வரகு, பிரெட் தூள் 1 கரண்டி
பெரிய வெங்காயம் 2
தக்காளி, உருளைக் கிழங்கு
தலா 3
பச்சை மிளகாய் 4
மிளகுத் தூள், சுக்குத் தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முருங்கைக் கீரை பொடியாக நறுக்கியது எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். உப்பையும் போட்டு நன்கு பிசைய வேண்டும். பின்னர், கட்லெட்டுகளாக தட்டி பிரெட் தூளில் புரட்டி எடுத்து தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இரு பக்கமும் நன்றாகச் சிவக்க வைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.